Saturday 25 February 2012

ஜீவன்


பனிவிழும் சோலையில்
பாறைகள் பொங்கக் கண்டேன்... 

விரிந்தப் பூக்கள்
உதிரக் கண்டேன்.... 

வீசியக் காற்றின் 
தன்மை மாறக்கண்டேன்... 

பேசிய மொழிகள்
ஊமையாகக் கண்டேன்...


தீண்டியக் கைகள்
முடமாகக் கண்டேன்...


விட்டுப்போய்விடுமோ!!! 

அச்சத்தை மறைக்க...
மிச்சத்தைக் கொண்டு
மீண்டும்...
மிகவும்...
நேசித்தேன்.... 

இருந்தும்.... 

எறிந்துப்போன
சாம்பலில்
மௌனம்....
காக்கிறாய்! 

அமர்ந்திருந்த சிம்மாசனம்....

இல்லாமல்போகக்
காத்திருக்கிறது!!!

No comments:

Post a Comment