Saturday 25 February 2012

துலாபாரம்

கோடிக் கனவுகள்
வாடிக் கிடக்க
தாளம் தப்பாமல்
பாடிய வானம்பாடி
எஞ்சித் தவழும்
கற்பனைக் கூட்டி

பாதை இட்டு
வானத்தில் செல்ல
பாடிய ராகம்
மறந்துப் போக
தேடிய யோகம்
கரைந்து மூழ்க
வானவில் வண்ணங்கள்
கலைந்து மறைய

உறவுகள் பிரிவுகளாக
மறைவுகள் செலவுகளாக
வேட்கையில் ஆயுள்
வரவுகளை எண்ணி...

No comments:

Post a Comment