Saturday 25 February 2012

முதல் இரவு

இதிகாசங்கள் காணா
பரிவாரங்கள் சூழ
புராணங்கள் புகழா
பட்டாபிஷேகம் நடக்க
யுகங்கள் உணரா
வரங்கள் கொடுக்க
உயிர்க் குண்டம் எழுப்பி
மெய் நெய் ஊற்றி
மோக யாகம் வளர்க்க
அகம் வழுவிய
தங்கக்கலசத்திற்கு
பூர்ணகும்பம்!!

No comments:

Post a Comment