Saturday 25 February 2012

என் நெற்றியில்...

மார்கழிக் காற்றின்
மெல்லியத் தீண்டல்...
பௌர்ணமி இரவில்
படகு பயணம்...
கடற்கரை நிற்பில்
அலைகளின் பாதப்பூஜை...

மயங்கியக் கண்களில்
குறும்பின் தேக்கம்...
தயங்கிய இதழ்கள்
இசைக்கும் மௌனம்...
பின்னிய இதயங்கள்
படைக்கும் சரணங்கள்...

அதுவும்...
இதுவும்...
எதுவும்...
ஈடில்லை...
உன் அதரம் பதிக்கும்...
ஓர் முத்திரைக்கு!

No comments:

Post a Comment