Saturday 25 February 2012

புரிதல்

பிடித்துப் பார்த்தேன்
பிரவேசிக்க...
சிந்திச் சேர்த்தேன்
சித்தரிக்க...

பதறி விட்ட
சில நிமிடங்கள்..
சிதறி விட்ட
பல நொடிகள்...

நின்று ரசிக்க
நேரமில்லை...
ஓடும் கனவுகள்
சேரவில்லை...

கண்டுக் களித்த 
காட்சிகள்...
உணர்வுகள் போற்றும்
சாட்சிகள்...

மதம் பிடித்த 
உணர்ச்சிகள்...
பதமாக எழும்
புணர்ச்சிகள்...

இல்லையென
ஒன்றுமில்லை...
எல்லாமென
எதுவுமில்லை...

யாரும் அற்ற
வனமாய்...
எவரும் அறியா
பிண்டமாய்...

கால் சூடுத் தேடி...
அலைந்துப் பிரியும்...
ஆர்ப்பரித்து...
சுழன்ற...
மௌனம்....!!!!!

No comments:

Post a Comment