Saturday 25 February 2012

பட்டதாரி


உயிர் எழுத்துக்களை
விழியில் கற்றேன்... 

மெய் எழுத்துக்களை
உணர்வில் கற்றேன்... 

வல்லினத்தை...
வளையும் நாணத்தில்
பயின்றேன்... 

மெல்லினத்தை...
மிளிரும் இதழோரத்தில்
பயின்றேன்... 

இடையினத்தை...
இடமும் வலமும்
படித்தேன்... 

ஒருமையை...
சிறியப் புல்லியில்
கண்டேன்... 

பன்மையை...
அரிய பந்துகளாக
கண்டேன்.... 

உயிர்மெய்யை...
உயிரூற்றி
மெய்க்கலந்த
தருணத்தில்...
பயின்று, கற்று...
பட்டமும் பெற்றுவிட்டேன்...
உணர்ச்சி உருவமெடுத்த
உவமை உன்னிடத்தில்!!!

No comments:

Post a Comment