Saturday 25 February 2012

ஈரம்


நீராடும் நீர்குடமே
நின்றாடும் வரைப்படமே...
நீர்ப்போக நிலையில்லை...
நிறுத்திவைக்க வலையில்லை!
நித்தம் நீ என்னைவிட்டு
நீந்திச் செல்லும் தூரம்...
நத்தையெனப் பின் தொடர்ந்தேன்...
நாலுவார்த்தை சுமந்து நின்றேன்!
நீர்குமிழி நீந்திவர...
நனைந்ததுச் சாரல்...
நிரம்பிவந்த மழையில்!!

No comments:

Post a Comment