Saturday 25 February 2012

அடிமை சாசனம்


 வாழைத்தண்டு கால்களில்
கொலுசுக் கண்டேன்...
இன்னும்...
ஒர் சலங்கையாக
கோர்க்கவா...
என் சிறிய இதயத்தை?


பூம்மேனி கவர்ந்த...
ஆடைகள்...
சணலில் கண்டேன்...
கொடியாகக் கட்டவா
நினைவுகள் ததும்பும்...
என் நரம்புகளை?


என்னை
வேண்டிய விதம் மட்டும்...
நீ சொல்...
உனக்கு 
நான் தருகிறேன்....
விகிதம் வகுத்து...
அடிமை சாசனமாக
என்னை!!!
என் உயிரைக் குடையும்
உன் அர்த்தமுள்ள...
மௌனத்திற்காக!!!

No comments:

Post a Comment