Saturday 25 February 2012

அவனின் அவள்

என்னென்று அழைக்க
நேற்று கண்ட உன்னை...
மிஞ்சிய நாட்களுக்கு
திருடிக் கொண்டாய் என்னை...
வர்ணிக்க எண்ணி
திக்கு முக்காடி நிற்கிறேன்
பெண்ணே!
யார் நீ? யார் நீ? 
என புலன்கள் கேட்க...
பார் நீ! பார் நீ!
என இதயம் உரைக்க...
தேவதை நீ இருக்க...

கம்பனின் புலமையில்
சிக்காத சிந்தனை நீ!
ரவிவர்மன் சிந்திக்காத
சித்திரம் நீ!
பல்லவர்கள் செதுக்கமறந்த
மாமல்லபுரம் சிற்பம் நீ!
ஷாஜகான் கண்டிருந்தால்...
எழுப்பியிருப்பான்...
கோடி தாஜ்மஹால்கள்!

உயிரும் மெயும் நீயாக...
வரமும் சாபமும் நீயாக...
பிரிவும் உறவும் நீயாக...
தாயும் சேயும் நீயாக...
வரவும் செலவும் நீயாக...
பிழையும் திருத்தலும் நீயாக...
பூமியும் வானும் நீயாக...
காணும் காட்சியெல்லாம்
நீயாக...
நீ மட்டுமாக...
ஜீவன் கரைய வேண்டும்...
உன் மூச்சோடு!!

No comments:

Post a Comment