Monday 1 February 2010

முதல் காணிக்கை

நாகரீகம் என்ற பெயரில்...
காதலை கொச்சைப்படுத்திவிட்டு
பண்பாட்டை மறந்து
நிதானத்தை இழந்து
தன்னடக்கத்தை விற்று
காலங்காலமாக கட்டிக்காத்த குடும்பமானத்தை,
ஊராரின் நையாண்டிக்கு தாராளமாக அர்ப்பணித்துவிட்டு
தேவைகளைத் தீர்த்துக்கொண்டு...
வேண்டுமா? வேண்டாமா? என்று
நாணமில்லாமல் விவாதித்தார்கள்
நீ முளைத்துவிட்டாய் என்றறிந்து
உன்னை விதைத்தவனும், நிலத்தை விற்றவளும்!
ஆனால்,
விதி நிர்ணயிக்க... காலம் ஒத்துழைக்க...
மக்கள் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டு
நீயே தைரியமாகப் பிறந்துவிட்டாய்
இந்த பரந்த உலகை நேரிட!
பிறகு,
உன் கண்ணீர்த்துளியை மட்டும் ஏன் பிடித்துவைத்திருக்கிறாய்?!!
அதையும் தைரியமாக போகவிடு...
உன் வாழ்க்கைப் போராட்டத்திற்கு..
நீ அற்பணிக்கும் முதல் காணிக்கையாக!!

1 comment: