Monday 22 February 2010

முத்துக்கள்


கருமுத்துக்கள் சுமந்த...
மீன் விழிகள்!
வெண்முத்துக்கள் மூடிய...
பவழ இதழ்கள்!
மச்சமுத்துக்கள் தாங்கிய...
சங்கு கழுத்து!
நம் மழலை முட்டத்துடிக்கும் முத்துக்கள்
பொதிந்த கவிதைகள் !
நம் உயிர்...
உரு கொண்டுவளர...
என் ஆண்மை வென்ற...
உன் பெண்மையை
முத்தென உள்ளடக்கிய காவியம்!
அழகே...
எத்தனை எத்தனைச் சிப்பிகள்
உன்னில்?!!!
நான் சொன்னது பகுதி...
சொல்லாததோ கோடி!!
அதிசயங்கள் ஏந்திய...
அபூர்வம் நீ!!

No comments:

Post a Comment