Monday 1 February 2010

கோவில் புறா


ஆண்மைக்கு அகராதியாய்...
அன்புக்கு இலக்கணமாய்...
வீரத்திற்கு புகலிடமாய்...
அறிவுக்குச் சுரங்கமாய்...
கண்களுக்கு ஓவியமாய்...
இதயத்தின் காவியமாய்...
படைத்து...
தொழிலை முடித்துக்கொண்டான்
பிரம்மன்!

மன்மத அம்புகள் அஸ்திவாரமிட்டு...
காந்தப்பார்வை பூஜைச்செய்து...
உணர்வுத் தூண்கள் எழுப்பி...
உணர்ச்சித் தோரணங்கள் தரைப்புரள...
காதல் மண்டபம் கட்டி...
காம விளக்கேற்றி...
இதயக்கோவில் கும்பாபிஷேகம் செய்து...
பிறந்தப் பயனை அடைந்துவிட்டாய்
நீ!

வெட்கம் வேர்சாய...
கனவுகள் அலைமோத...
பெண்மைத் ததும்ப...
மென்மைத் தத்தளிக்க...
மோகப் புயலில்
நனைந்தச் சிறகுகள் குளிர்க்காய...
சரணடைந்தேன் மண்டபத்தில்...
கோவில் புறாவாக
தலைவனின் கதக்கதப்பில்...
நான்!

1 comment:

  1. க்ரேட்..

    இன்னும் இன்னும் யோசிச்சிருந்தா அற்புதமா வந்திருக்கும்...!

    ReplyDelete