Monday 1 February 2010

மணியோசை

கருவிழி வண்டுகள் குறுகுறுப்பு
ஆழ்மனதை வட்டமிட...
குடமேந்தி மெல்லிய ராகம்
ஆத்தோரம் நடக்க...
அழகை
சலங்கைகள்
வழியெல்லாம் விவாதிக்க...
தடங்கள்
கல்வெட்டென உருவெடுக்க...
அன்னம்
வருணதேவனின்
வரப்பிரசாதத்தில் இறங்க...
பொன்மஞ்சள் வர்ணம் பூசி
கரையேர...
பட்டுடுத்தி தோகைவிரித்து...
விவாதமும் உருமாறுதலும் தொடர...
முக்கண்ணனின் இல்லமேறி...
மேள அதிபதி செவியில்
ரகசியம் ஓதி...
மூலவனின்
மணியோசை எழுப்பி...
விடையென வரமளித்துவிட்டாள்...
ஜீவ விருக்ஷம் தழைத்தோங்க!!!

2 comments:

  1. en arivukku ettavillai enna solli irukkureergal endu, aanal algaga irukkirathu.. kovilil iraivanakkam nigaluvathai eluthi irukkureergal ndru ennukiren..

    ReplyDelete
  2. இன்னும் இதுபோல் நிறைய எழுதுக...!

    ReplyDelete