Monday 1 February 2010

கையொடிந்த சிற்பங்கள்

கனவுகள் அவைகளாகவேயிருக்க...
நிஜமும் கருப்பாகவே நடக்க...
உறவுகளின் பள்ளத்தாக்காய்...
உணர்ச்சிகளின் இடுகாடாய்...
உணர்வுகளின் சுடுகாடாய்...
அவமானத்தின் நீர்வீழ்ச்சியாய்...
உவமைக்கு ஒவ்வாத உதாரணமாய்...
அஃறிணையான உயர்திணையாய்...
மானத்தை ஏலம்விட்டு...
கற்பைத் தள்ளுபடிக்கொடுத்து...
பிறந்த இனத்திற்கு விலக்காகி...
காட்டு ஓநாய்களின்
அஸ்தமன அரங்கேற்றத்தில்
ஒலித்துக்கொண்டும் ஒளிர்ந்துக்கொண்டும்
மேடையெங்கும் ஊர்வலம்!
வெறிநாய் பாலுண்ட வர்க்கம்
உளிக்கொண்டுச் செதுக்கியதால்...
உயிர்பெற்று உருக்குலைந்த...
கையொடிந்தச் சிற்பங்கள்...
கல்லறைக்கெங்கிலும்...
ஒருமையில்!!!!

1 comment: