Monday 1 February 2010

காத்திருக்கிறேன்....

அன்பே,
உன் கண்களால் கைது செய்தாய்.....
பொறுத்துக்கொண்டேன்! 
உன் சிரிப்பால் போர் முரசிட்டாய்...பொறுத்துக்கொண்டேன்!
உன் இதழ் சிந்தும் முத்தங்களால் போரிட்டாய்
அதையும் பொறுத்துக்கொண்டேன்!
இப்படி நீயாக வலிய வந்து, என் இதய களத்தில் காதல் போர் தொடுத்துவிட்டு 


சட்டென்று இப்பொழுது மௌனதவத்தில் அமர்ந்துவிட்டாய்?!!! 
இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது!
காரணம் எதுவாயினும் சரி....!
உயிரே,
இந்த உலகை வெறுத்தேன்...
உன் நினைவோடு வாழ!
நான் ஷாஜகான் அல்ல உனக்காக தாஜ்மகால் எழுப்ப!
சாதரண மனிதன்! உள்ளமெங்கும் உன்னை நிரப்பி, அதில் கனவுகளுடன் நீந்துபவன்!
உன் இந்த மௌனதவம்...
நான் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் என் பிழைக்கு நீ தரும் தண்டனையா?!
அல்ல
ஆயுள் முழுவதும் உன்னையே நினைக்க வேண்டும் என்ற உன் பேராசைக்கு நீ கையாளும் யுக்தீயா?!
பதில் அறியாமல் நான் உன்னை விடமாட்டேன்!
காத்திருக்கிறேன் உன் இதய கதவுகளின் வாயிலில்...
நீ எட்டியாவது பார்ப்பாயென்று! 

1 comment:

  1. காத்திருக்க வைப்பது பெண்கள்தாம்...! ஆண்கள் அல்ல...

    ReplyDelete