Monday 1 February 2010

சிரிப்பு


பூஞ்சோலையில் நடந்தேன்...
பூக்கள் முகம் திருப்பிக்கொண்டன!

ரசிக்க எண்ணினேன்...
நிலவு காணாமல் போனது!

கரையில் நின்றேன்...
நதி வற்றிவிட்டது!

சுவாசிக்க முயன்றேன்...
காற்று திசை மாறியது!

பாட நினைத்தேன்...
வரிகள் ஊமையாயின!

வாழ முற்பட்டேன்...
உறவுகள் துண்டித்துக்கொண்டன!

துணைக்கு வர...
நிழலுக்குக்கூட அவமானம்
நிலைமை காரணம்!!

நினைத்த மாத்திரத்தில் கல்யாணம்...
எப்பொழுதும் வாழாவெட்டிக் கோலம்!

உருவாக்கியவர்கள் சிரிக்கிறார்கள்...
சறுக்கி விழுவதைக் கண்டு!!

மனசாட்சி சிரிக்கிறது...
சருகாகி விழுந்ததைக் கண்டு!!!

1 comment: