Monday 22 February 2010

நிலைமை


பாரதம்...
சிறந்த ஜனநாயகம்!!....
செவிகள் துருத்தும் வசனம்...
சுதந்திர தினத்தன்று!
குடியரசு தினத்தன்று!
அர்த்தமற்ற வாக்குகள்...
அடுத்த நாள்முதல்!!
மனிதனின் அறிவு...
அறுவடையாக்கியது...
பணம்...
காவு வாங்கியதோ...
ஜனநாயக வயலில்...
விளைந்த ஜனப்பயிர்களை...
சிலவாகயிருந்து...
பலவாகியிருக்கும் களைகள்!!
காகிதம் எறிந்தால்...
ஏழைச் சந்தையே விலைக்கு...
பேரமில்லாமல்!!
சில நூறு...
காந்தித் தாத்தாப் படங்கள்...
மின்னும் குடங்கள்...
குடலருக்கும் குப்பிகள்...
ஏலத்தின் முடிவில்
ஆயிரக்கணக்கான...
கள்ளவோட்டுகள் பெட்டிகளில்!!
நாளை திருவோடு நிரந்தரம்...
அறியாது...
இன்று உரிமைகள் தரமில்லாமல்...
விற்பனை...
நேற்றே வரிசையில் வெட்கமில்லாமல்...
அதையும் வாங்க!!
கட்சிக் கொடிகள்...
இயற்கையின்...
ஒரு வண்ணம் குறையாமல்!
சின்னங்கள்...
உயர்திணையில் மனிதன் தவிர்த்து!
அஃறிணையில் பிணம் தவிர்த்து!!
லட்சக்கணக்கான வோட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி- பொருத்தமாகயில்லை...
லட்சக்கணக்கான கள்ளவோட்டுகள்
குவித்ததில் வெற்றி- அர்த்தமாகயிருக்கும்!
விரலில் வைக்கும் அடையாளப்புள்ளி...
அந்த நபருக்கு வைக்கும் முற்றுபுள்ளி...
இது தெரியாமல்...
ஆட்டமென்ன, ஓட்டமென்ன??
துள்ளித்துள்ளி!!!
இரக்கமில்லாமல்...
வாரிக்கொண்டுப் போனாயே
பால்மனமாறாத பிஞ்சுகளை அன்று...
நிம்மதியுறக்கம் தந்து...
சுரண்டிக்கொண்டுப் போகமாட்டாயோ...
அரசியல் போர்வையில்...
உணர்ச்சியற்ற சவங்களை...
சுனாமியே... இன்னும் ஒரே முறை வந்து?!!!
மன்னனின் குற்றம் தண்டிக்க...
மதுரையை எரிக்க...
ஒரு கண்ணகியிருந்தாள்!
மாண்புமிகு அரசியல் குப்பைகளையெரிக்க...
எத்தனைப் படைக்கவேண்டுமோ...
அருள்மிகு பிரம்மன்?!!!
அதற்கு முன்...
அவன் பெயரில்...
அடையாள அட்டை அச்சிடாமலிருந்தால்...
கள்ளவோட்டு விழாமல்லிருந்தால்...
பாரதத்தாய் புண்ணியம் செய்தவள்!
படைக்கும் தொழிலோன் அதிர்ஷ்டக்காரன்!!

2 comments:

  1. மதிப்புமிக்க கோபம்.

    ReplyDelete
  2. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete