Sunday 21 February 2010

என்னென்று அழைக்க??

கண் பதிந்து விழ
மனம் புரிந்து எழ
அகப்பட்டேன் நின் வசம்!
வானவில் கனவுகள் காட்டி
இமைகள் பிடிவாதம் பிடிக்க
கண்கள் அடைக்கிறேன்...
சூரியன் உறங்குமுன்...
கண்டு மயங்க உன்னை!
உனக்காகவே துடிக்கிறேன்
என்னிடம் இதயம் சொல்ல...
பயணமாகிறேன் திசையறியாமல்
உன் கால் சுவடுகள் தேடி!!
ஒரு மணி கூட்ட...
விண்ணப்பித்துள்ளேன் கால தேவனிடம்...
மனதாலும் நினைவாலும்
அசைப்போட உன்னை!
தனிமையை மட்டும் நேசிக்கிறேன்...
என்னுள் நீ வழுக்கியப் பின்!
வழுக்கும் பாறைகள்
பிடித்தவர்களின் இதயமென...
புரிந்தும் கொண்டேன்!
யாருக்கும், எதற்கும்
அளவு கோலானாய்!
உன்னால்...
ரசிக்க பயின்றேன்...
ருசிக்க கற்றேன்...
வசிக்க முயல்கிறேன்...
அழைக்காமல்...
பதவியேற்றாய்!
கேட்காமல்...
கற்றுக்கொடுத்தாய்!
.............................??

2 comments:

  1. \\தனிமையை மட்டும் நேசிக்கிறேன்...
    என்னுள் நீ வழுக்கியப் பின்!


    wow.........very nice!

    ReplyDelete