Wednesday 17 February 2010

கவிதைக்கும் ஒரு நேரம்

















கண் சிமிட்டும் நேரத்தில்
உள்ளே நுழைந்து...
இன்ப கலவரம் செய்து...
கொடிப் பறக்கவிட்டாய்...
குருதி உறைய!
தேன் பாரமில்லை பூவுக்குள்...
தனியில்லை நீ என்னுயிருக்குள்!
நடமாடும் கவிதை குறித்து
வார்த்தைகளை அணிவகுத்தேன்...
நாவு ருசிக்க
கவிதையே படிக்க...
அசந்துப்போனேன்
நொடிகளில் மொழி...
உயிர் கொண்டதைக் கண்டு!
அயுள் முழுதும்...
படித்திருப்பேன் காவியத்தை...
உறக்கத்தையும் ஒத்திவைத்து!
மனிதன் பிறப்பும் இறப்பும்...
நூற்றாண்டுகளாக!
காதல் ஜனனம்...
உன் தொட்டிலில்!
மரணம்...
நம் கல்லறையில்!

1 comment:

  1. \\நாவு ருசிக்க
    கவிதையே படிக்க...
    அசந்துப்போனேன்
    நொடிகளில் மொழி...
    உயிர் கொண்டதைக் கண்டு!


    Romba nalla irukkku intha lines!

    ReplyDelete