Monday 1 February 2010

மயிலிறகு நினைவுகள்

இரெண்டாம் குழந்தைப் பருவத்தையடைந்து...
மூன்றாம் காலில் தவழ்ந்துக்கொண்டிருக்கிறேன்!
வெண்மேகப் பஞ்சு போல்
நரை ஆக்கிரமித்துவிட்டது!
கடல் அலைகள்போல்
சுருக்கம் ஆட்கொண்டுவிட்டது!
நடைமுதிர்ந்து...
எல்லாம் எப்பொழுதும் காணமுடியவில்லை!
உண்ணும் உணவு...
மெய்யின் இஷ்டமாகிவிட்டது!
இருப்பு அதிகரித்து...
நடப்பு குறைந்துவிட்டது!
பொரித்தக் குஞ்சுகள் வளர்ந்துவிட்டன...
அவரவர் பாதையில் பறந்துவிட்டன!
ஆசையாய் அரிசியிட்டுவைத்த மயிலிறகு
கண்ணிர்விட்டுக்கொண்டு...
உன் குழந்தைத் தனத்தை நினைவூட்ட...
நம் மயிலிறகு நினைவுகளை அசைப்போட்டப்படி...
காத்திருக்கிறேன்...
உன்னை மீண்டும் சேர...
துணையாக!!!!


8 comments:

  1. வலையுலகத்திற்கு வருக.வருக.. எண்ணங்களை அள்ளி தருக..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. tamil manathula post panreengala

    ReplyDelete
  3. word verification profile kulla poi remove pannunga

    ReplyDelete
  4. வாங்க வாங்க, சூப்பர். இன்னும் எழுதுங்க. A day a post plz.. :)

    ReplyDelete
  5. அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. ada ada ada.. ennama eluthi irukkenga..!

    ReplyDelete
  7. //இருப்பு அதிகரித்து...
    நடப்பு குறைந்துவிட்டது!
    பொரித்தக் குஞ்சுகள் வளர்ந்துவிட்டன...
    அவரவர் பாதையில் பறந்துவிட்டன!//

    ரசனை...!

    ReplyDelete
  8. பொரித்தக் குஞ்சுகள் வளர்ந்துவிட்டன...
    அவரவர் பாதையில் பறந்துவிட்டன

    Amazing lines......!!!!

    ReplyDelete