Thursday 4 February 2010

என்னருகில் நீ இருந்தால்..


தாயும் தந்தையும்...
இணைந்து பாட...
பிறந்தேன் மெல்லிய சந்தமென!
ஏராளமான பல்லவிகளும்...
தாரளமான சரணங்களும் குவிய
அன்பு விரிப்பில் தவழ்ந்து...
பண்புச் சோலையில் திரிந்து...
மென் மலரென வளர்ந்தேன்!

காலம் கைப்பிடித்துக் கூட்டிச்செல்ல...
வாழ்க்கைப் பாதையில் நடந்தேன்...
உயிருள்ள வெறும் ஜீவனாக!
கைகளை உன் கரங்களில்...
காலம் இடம்பெயர்க்க...
கற்றேன் உலகை...
பெற்றேன் பெண்னெனும் நம்பிக்கையை!
நட்புத் தென்றல் வீசி...
முன்னேற்ற பூக்கள் கொண்டு...
வெற்றி மாலையைச் சூட்டினாய்
எங்கோயிருந்து வந்து!!

சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டு...
பாச நேச உணர்ச்சிகளைக் கடந்து...
புவியீர்ப்பு சக்திக்கும் மேலாக
ஏதோ ஒன்று ஈர்க்க...
உன் வசப்பட்டேன் நான்!
அதில்...
வருத்தம் துளியும் இல்லை...
பேரின்பத்தை வர்ணிக்கவோ
உலக மொழிகளில் வார்த்தைகளில்லை!!

பிறப்பின் அர்த்தம் கற்றுக்கொடுத்தாய்...
பலர் முன்னிலையில்...
பிரபலமாக்கியும் எடுத்தாய்!
உன்னிடம்...
நான் பட்டக் கடன்...
எண்ணிப்பார்த்தால்...
தீரும் கணக்கல்லவே;
எனினும்...
வேண்டுகிறேன்...
மீண்டும் ஒரு ஜென்மம்...
உன் நட்புக்கு...
கடனாளி ஆக!!!

1 comment:

  1. உணர்ச்சிபூர்வமா இருக்குங்க?

    யாரந்த கடவுள்?

    ReplyDelete