Tuesday 6 March 2012

கற்பம்


வெள்ளிரதமொன்று
ஆடைப்பூண்டு வந்தது
என் அருகில்
பள்ளியறை வாசம் செய்ய... 

ஜன்னலோரம் வெண்ணிலாக்காய...
என் கண்ணோரம் தேன்பலா
வந்து நின்றது நாணம்காய...
அழைப்புவிடுத்தது...
இன்பத்தில்தோய! 

ஆனந்தத் தாண்டவமாட
வேண்டாமே ஆடை...
ஒரு குடையென
எடுத்துடுத்தவா என்னை
காத்திருக்கிறேன் உன்னை... 

அரங்கத்தை...
திரைக்கொண்டு மூடினால்...
அரங்கேற்றம் எங்கே செய்வதுப்பெண்ணே?
அக்னியில் நான்குளிக்க...
மழையெனவா இன்னே!


இதோ தொடங்கப்போகிறேன்...
ரதியின் ஓவியக் கண்காட்சி...
என்னுளிருக்கும் மன்மதனுக்காக...
நன்றிதெரிவித்துவிட்டேன்...
படைத்த பிரம்மனுக்காக!


இடையினம் கவரும் பட்டு வேண்டாம்...
அதைத்தாங்கும்...
சுமைத்தாங்கியும் வேண்டாம்...
மெல்லினங்களை...
விடுதலைச்செய்ய...
காப்புகள் வேண்டாம்!


வேண்டாமென்று எடுத்தப்பொருள்களுக்குள்...
வேண்டுமென்றிருக்கும் அர்த்தங்கள்தான் எத்தனை....
உயிருள்ள ஓவியமென்று
நினைத்தேன் உன்னை...
உயிரெடுத்து உயிர்க்கொடுக்கும்காவியமென...
அனைக்கவா...அணைக்கவா...
என்னை!!


No comments:

Post a Comment